Date: Wed Feb 21, 2001 3:48 pm
Subject: Upanishad -BrahmoUpanishad (Part 1)
அறிமுகம்:
வேதங்களும் உபநிஷத்துக்களும் தமிழ் மொழியில் எழுதப்படவில்லையே என்ற ஆதங்கம்
தமிழின் வழி இந்திய தத்துவ ஞானத்தை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு பல
காலங்களாக ஒரு குறையாகவே இருந்து வந்துள்ளது. இதனை நிவர்த்திக்கும் வகையில்
தற்பொழுது பல மொழி பெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. எனது சமீபத்திய தமிழக
பயணத்தின் போது எனக்கு 108 உபநிஷத்சாரம் என்னும் நூல் கிடைத்தது. 'அண்ணா'
என்பவரால் சமஸ்கிருத்தத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது
இந்த நூல். இதனை படிக்கும் போது, உபநிஷத்துக்கள் தோன்றிய காலத்து தத்துவ
சிந்தனைகளுக்கும் தற்போதைய சிந்தனைகளுக்கும் உள்ள தொடர்ச்சி, ஒற்றுமைகள்,
சிந்தனை வளர்ச்சி ஆகியவை பற்றி எழுந்த எனது சிந்தனைகளை கட்டுரையாக அமைக்க
விரும்பி எழுந்ததே இந்த முயற்சி.
சுருக்கம்
மனித உடலில் நான்கு முக்கிய பாகங்கள் இருக்கின்றன. அவை தொப்பூழ், இருதயம்,
கழுத்து, தலை உச்சி ஆகும். இந்த நான்கு இடங்களிலும் இறைசக்தி பிரகாசித்துக்
கொண்டிருப்பதாக இந்த உபநிஷத் கூறுகின்றது. அந்த இறை சக்திகளாவன ஒரு
மனிதன் விழிப்பில் இருக்கின்ற போது பிரம்மாவும், கனவு நிலையில் இருக்கின்ற போது
விஷ்ணு பகவானாகவும், தூக்கத்தில் ருத்ரனாகவும், துரிய நிலையில் பரப்பிரம்மாவாகவும்
அமைந்திருக்கின்றன.
அந்த பரப்பிரம்மமானவன் மனித உருவிற்கு அப்பாற்பட்டு சுயஞ்சோதி வடிவினனானவன்.
அவனே சூரியனும், எங்கும் வியாபித்திருக்கும் விஷ்ணுவும், உலகாளும் ஈசுவரனும் ஆவான்.
நிர்வாண நிலை என்பது எல்லாம் பரப்பிரம்மாக விளங்குகின்ற நிலையில் ஏற்படுவது.
எல்லா தேவதைகளும் மனித உடலில் இருதயத்தில் இருக்கின்றார்கள். உயிர் நிலையும்
இங்குதான் இருக்கின்றது என்கின்றது பிரம்மோபநிஷத்.
தொடர் சிந்தனை:
மனித உடலின் இயக்கம் என்பது மிகவும் துல்லியமான (complex) ஒன்று. மனித உடலில்
தெய்வ மந்திரங்கள் எல்லா இடங்களிலும் பரவியிருக்கின்றன. இந்த மந்திர வடிவங்கள்
உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் பரவியிருப்பதால்தான் மனித உடல் இயங்க
முடிகின்றது. மனித உடலின் எந்த ஒரு சிறு பகுதியிலிருந்தும் தெய்வ சக்திகள் தன்னை
வெளிப்படுத்திக் கொள்ளுகின்ற சமயத்தில் அவ்வுருப்பு செயல் இழந்து விடும் தன்மையை
பெருகின்றன.
இதனை தற்கால தொழிற்துறை வளர்ச்சியில் பெருமளவில் வியக்கத்தக்க வகையில்
வளர்ந்து வந்துகொண்டிருக்கின்ற Artificial Intelligence, Robotics Engineering
துறையோடு ஒப்பிட்டு மனித உடலமைப்பை ஓரளவு புரிந்து கொள்ள முடிகின்றது.
ரோபோட் பலவகைப் படும். இவற்றில் சில மனித உருவத்தை ஒத்து அமைக்கப் படினும்,
பெரும்பாலானவை மனித உருவின் ஒரு சில பகுதிகளை மட்டுமே கொண்டு
செயலாற்றுகின்றன. உதாரணமாக கார் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும்
தொழிற்சாலைகளில் தொடர்ச்சியான வேலைகளைச் செய்வதற்காக செய்யப்பட்டுள்ள பல
இயந்திரங்களைக் கூர்ந்து கவனித்தோமானால், அவை மனித உடலை எந்த அளவில் ஒத்து
செய்யப்பட்டுள்ளன என்பது தெரிய வரும். பொதுவாக ஒரு இயந்திரம் மனிதனின்
தலையிலிருந்து இடுப்புப் பகுதி வரை எலும்பு வடிவத்தை ஒத்திருக்கும்; அதோடு ஒரு
தனிப்பட்ட வேலையைச் தொடர்ச்சியாகச் செய்வதற்கு ஒரு கைப்பகுதி போன்ற நீளமான
ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும். அந்தக் கைப்பகுதியானது 90 அல்லது 180 டிகிரி
(செயலுக்கு தக்க வகையில்) அளவிற்கு சுற்றி தொடர்ச்சியான வேலைகளைச் செய்யும்.
ஆக, அந்த கையானது அசைவதற்கு பல கனினி மென்பொருட்கள் தேவைப்படுகின்றன.
ஒவ்வொரு மென்பொருளும் இயந்திரத்தின் ஒரு தனிப்பட்ட செயலுக்கு பொறுப்பாகின்றன.
அதோடு இயந்திரங்களில் மிக முக்கியமான பகுதியாகக் கருதப்படுவது அதன் கையிலுள்ள
விரல் பகுதிகளாகும். அவை மனித விரலை உதாரணமாகக் கொண்டே வடிவமைக்கப்படும்.
பொதுவாக தானியங்கி ரோபோட் இயந்திரங்களில் மனிதவிரல்களைப் போல 5 விரல்களை
அமைப்பது குறைவே. அத்தோடு பொருட்களைப் பிடிப்பதற்காக பெரும் பாலும் ஒன்று
அல்லது இரண்டு விரல்களே அமைக்கப்படும். அவற்றின் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு
தனிப்பட்ட மென்பொருள் module தேவைப்படும். ஒரு சிறு கைவிரலின் இரும்பினை
அசைப்பதற்கே கடினமான மென்பொருட்கள் எழுதப்படும் போது, மனித உடலை அதன்
எண்ணற்ற அசைவுகளை இயக்குகின்ற மென்பொருட்கள் எப்படிப்பட்டவையாக இருக்கும்
என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கின்றது.
மனித உடலில் ஒரு விரல் மட்டுமில்லையே. ஒவ்வொரு கையிலும் ஐந்து விரல்கள்,
ஒவ்வொரு விரலிலும் 3 சிறு எலும்புகள் என 27 எலும்புகளைக் கொண்டு ஒரு கைப்பகுதி
அமைந்துள்ளது. இது மட்டுமல்லாது உடல் முழுதும் 206 எலும்புகள் அமைந்துள்ளன.
அதோடு தசைகள் உள்ளன; நரம்புகளும் ரத்த நாளங்களும் இன்னும் பல பகுதிகளும்
இந்த உடம்பினில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் இயக்குதல் என்பது எப்படி ஒரு
மனிதனால் முடிகின்றது. தன்னைப் பற்றிய ஒரு தெளிந்த அறிவே ஒரு மனிதனுக்கு
அமைவது இல்லை; தன்னுடைய திறமைகள் தெரிவதில்லை; தன்னுடைய எதிர்காலம்
தெரிவதில்லை; தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளும், சிந்தனைகளும் கூட மறந்து
விடுகின்ற நிலையிலேயே பெரும்பாலான மனிதர்கள் இருக்கின்றோம். ஆக
இம்மாதிரியான பல நுண்மையான வி"யங்கள் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட
நிலையிலேயே இருக்கின்ற சாதாரண மனிதர்களாகிய நம்மால் எவ்வாறு நமது உடலின்
அங்கங்களை அசைத்து பல காரியங்களை இயற்ற முடிகின்றது?
மனிதன் பெரும்பாலும் தனது முழுச் சக்திகளையும் பயன் படுத்துவதோ அதனை பயன்படுத்தி
பயன் பெருவதோ இல்லை. இதனை யோகப்பயிற்சி வல்லுநர்கள் நன்கு
உணர்ந்திருக்கின்றனர். யோகப் பயிற்சியின் மூலமாகவும், தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற முனைப்பின் மூலமாகவும் மனிதனால் உடலினை நல்ல கருவியாகப் பயன்படுத்தி
தெய்வ சக்தியைப் பெற்று நல்வாழ்வு வாழ முடியும். இறைவனை முழுமையாக அடைகின்ற
நிலையில் உடல் என்பது இல்லாமல் போனாலும், இறைவனை அடைகின்ற வழியில்,
உடலைக் கொண்டே அது சாத்தியமாகின்றது. அதனை திருமூலரின் கீழ்வரும் பாடல்
விளக்குவதைக் காணலாம்.
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே (704)
பொதுவாக இறை சக்தியானது உடல் முழுதும் இருந்தாலும் குறிப்பாக ஆறு ஆதாரங்களில்
அவை Sதிரப்பட்டு, உடல் இயக்கத்தையும் ஆன்மப்போக்கையும் நிர்ணயிக்கின்றன. மனித
உடலினில் இருக்கின்ற ஆறு ஆதாரச் சக்கரங்களைப் பற்றிய குறிப்புக்கள் சித்தர்
நூல்களில் பரவலாகக் கிடைக்கின்றன. மூலாதாரம், சுவாதி?டானம், மணிப்பூரகம்,
அநாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்களும் திருமந்திரத்தில் ஆழமாக,
ஒவ்வொன்றின் தனித்தன்மைகளை விளக்கும் வகையில் தரப்பட்டுள்ளன. இதனையே
அடிப்படையாகக் கொண்டு பல சித்தர் பாடல்கள் மேலும் இவற்றினை விளக்கும் முகமாக
எழுதப்பட்டுள்ளன.
இந்த பிரம்மோபநி"த்தில் மூலாதாரம், சுவாதி?டானம் தவிர்த்த பிற நான்கு ஆதாரங்களைப்
பற்றிய குறிப்புகள் இருப்பதைக் காண முடிகின்றது. பொதுவாக மூலாதாரத்தில் சித்தி
புத்திகளுடன் கூடிய விநாயகனும், சுவாதி?டானத்தில் சரSவதி பிரம்மாவும்,
மணிப்பூரகக்தில் மகாலOEமியுடன் சேர்ந்த வி?ணுவும், அநாகதத்தில் ருத்ரியுடன் கூடிய
ருத்ரனும், விசுத்தியில் மணோன்மனி சதாசிவமாகவும், ஆக்ஞையில் பராசக்தி
பரசிவனாகவும், இவையெல்லாம் கடந்த சகSரதலத்தில் உருவற்ற அருட்சோதியாகவும்
கொள்ளப்படுகின்றது.
ஆனால் பிரம்மோபநி"த்தை கவனிக்கும் போது அங்கே இறைவன் உறையும் இடமாக
தொப்பூழ், இருதயம், கழுத்து, உச்சி ஆகிய நான்கு நிலைகளே கூறப்படுவதை கவனிக்க
வேண்டும். அத்தோடு இந்த நான்கு நிலைகளிலும் உடலின் நிலைக்கேற்ப விழிப்பில்
பிரம்மாவும், கனவில் வி?ணுவும், உறக்கத்தில் ருத்ரனும், துரியத்தில் பரப்பிரம்மமும்
இயங்குவதாகக் குறிக்கப்பட்டுள்ளதேயன்றி ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு தெய்வசக்தி
உரியது என்னும் கருத்து குறிக்கப்படவில்லை. இது மிக முக்கியமாகக் கவனிக்கப்பட
வேண்டிய ஒன்றாகும். அத்தோடு, பிற்காலத்தில் ஒவ்வொரு தளத்திற்கும் சக்தியோடு கூடிய
ஆண் தெய்வங்கள் கூறப்படுவது போல இங்கு பெண் தெய்வங்களைப் பற்றிய எந்த
செய்திகளையும் காணவில்லை.
மனித உடலின் ஒவ்வொரு பாகங்கள் அசைவதற்கும் அங்கே அதனை இயக்குகின்ற ஒரு
சக்தி நிச்சயம் தேவைப்படுகின்றது. அந்த மந்திர சக்திகளை நாம் இறை தேவதைகளாகவும்
காணலாம். இறைதேவதைகள் ஒவ்வொரு அனுவிலும் உறைந்திருந்து அதனை தனது
சக்தியின் முலமாக இயக்குகின்ற போதே மனிதனால் இயங்க முடியும். ஆக
பிரம்மோபநிஷத்தில் குறிப்பிட்டிருப்பது போலில்லாது உடல் முழுவதும் இறைசக்திகள்
நிறைந்திருப்பதாகத்தான் கொள்ள முடியும். ஒரு வகையில், பிரம்மோபநிஷத்தின்
குறிப்புக்களை ஆறு ஆதாரக் கொள்கையின் ஆரம்ப நிலைக் கருத்துக்களாகக் கொள்ளவும்
வாய்ப்பிருக்கின்றது.
தொடரும்.....
அன்புடன்
சுபா